Saturday, July 20, 2019

வெற்றிலை மாலை




இராமபிரான் இராவணனை போரில் வென்ற நற்செய்தியை அனுமன் அசோக வனத்தில் உள்ள சீதையிடம் தெரிவித்தார். அந்த இனிய செய்தியை கொண்டு வந்த அனுமனை கௌரவிக்கும் வகையில் சீதா பிராட்டி அருகில் இருந்த வெற்றிலை கொடியை பறித்து அனுமனுக்கு மாலையாக அணிவித்தார். 


எனவேதான் நினைத்த காரியம் வெற்றி பெற அனுமனுக்கு உகந்த சனிக்கிழமை அன்று அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.



வெற்றிலை மாலை கட்டும் முறை


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் கொட்டை பாக்கை வைத்து நான்காக மடித்து பூ தொடுப்பது போல கட்டுவதே பாரம்பரிய முறை.

சிலர் வெற்றிலையை சுருட்டி மாலையாக தொடுப்பார்கள். சிலர் வெற்றிலையை மடிக்காமல் நீளமாக கோர்த்து விடுவார்கள்.

வெற்றிலையை பீடா போல முக்கோணமாக மடித்து புகைப்படத்தில் உள்ளது போல் கோர்த்தும் மாலைகட்டுவார்கள். இடை இடையே பூக்களை சேர்த்துக் கொண்டால் இன்னும் அழகாக இருக்கும்.




வெற்றிலை மாலை கோயில்களில் உள்ள தெய்வ சிலைகளுக்கு மட்டுமே சார்த்தப் படுகிறது. வீட்டில் உள்ள சுவாமி படங்களும் சார்த்தப் படுவதில்லை.


பொதுவாக வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு தான் அணிவிப்பார்கள். ஆனால் கல்வியில் சிறந்து விளங்க தல்லாகுளம் இரட்டை விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உள்ளது.

அது மட்டுமல்ல செவ்வாய் கிழமை தோறும் பிள்ளையாருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிணால் கங்கண பாக்கியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Bangalore temples

Sri Kailasanatha Swamy Temple Nagarbhavi 1st Stage,  Chandra Layout Extension  II Stage, Nayanda Halli,  Bengaluru,   Karnataka 560072 https...