Thursday, July 4, 2019

பகவானும் பாகற்காயும்



பாகற்காய் படையல்


திருவாரூர் தியாகேச பெருமாள், திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் இறைவனுக்கு பாகற்காய் கறி நிவேதனம் செய்ய படுகிறது.

பாவக்காய் மண்டபம்


சித்திரை திருவிழாவின் பொழுது வில்லாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இறைவனும் இறைவியும் எழுந்தருளி ஒரு நாள் முழுவதும் தங்குவார்கள். அப்போது இறைவனை மருந்தீசராக வழிபட்டு வழி வழியாக பின்பற்றப்படும் ஒரு சம்பிரதாயப்படி பாகற்காயை படைக்கின்றனர். இதனாலேயே இந்த மண்டபத்தை பாவக்காய் மண்டபம் என்று அழைக்கின்றனர்.

புனித நீராடிய பாகற்காய்


துக்காராம் ஒருமுறை தீர்த யாத்திரை சென்றவர்களிடம் ஒரு பாகற்காயை கொடுத்து அவர்கள் செல்லும் புனித தலங்களில் உள்ள திருக்குளங்களில் அந்த பாகற்காயை குளிப்பாட்டி எடுத்து வரும்படி கூறினார்.

அவர்களும் அவ்வாறே செய்து அந்த பாகற்காயை துக்காராமிடம் திருப்பி கொடுத்தனர். அதை வாங்கி சுவைத்து பார்த்த துக்காராம் புனித தீர்த்தங்களில் நீராடியும் இந்த பாகற்காயின் கசப்பு மாறவில்லையே என்று நொந்து கொண்டாராம்.

நீங்கள் எத்தனை கோயிலுக்கு சென்றாலும் உங்கள் அடிப்படை குணம் மாறாவிட்டால் அந்த புனித யாத்திரையால் எந்த பயனும் இல்லை என்பதை விளக்கும் அருமையான சம்பவம் இது.

பாகற்காய் மாலை


சனிக்கிழமை அன்று பதினேழு பாகற்காய்களை மாலையாக கட்டி அணிவித்தால் வீடு கட்டுவதில் உள்ள தடைகளை அகற்றும் பாகற்காய் சனீஸ்வரர் வன்னி வேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில் அருள் புரிகிறார்.

No comments:

Post a Comment

Bangalore temples

Sri Kailasanatha Swamy Temple Nagarbhavi 1st Stage,  Chandra Layout Extension  II Stage, Nayanda Halli,  Bengaluru,   Karnataka 560072 https...